2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

Editorial   / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு   அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தி  செவ்வாய்க்கிழமை  (11) பி.ப 4.00 மணிக்கு  கவனயீர்ப்புப்  போராட்டம்  ஆரம்பமாகியுள்ளது. 

இப்போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்று ( 12)  புதன்கிழமை  மாலை 6.00  மணி  வரை  தொடரும்.

இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளனர்.

எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களின்றி  அனைவரையும்  கலந்து கொள்ளுமாறு  தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X