2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

தூதரகங்களுக்கு கைமாறும் சொகுசு வீடுகள்

Freelancer   / 2025 மார்ச் 29 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள், அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு விடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இவற்றில் தூதரகங்கள், பல்வேறு அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடங்கும் என்று அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர் விடுதிகளை நடத்துவதற்கு அந்த அமைச்சுப் பணியாளர் சொகுசு வீடுகளை வழங்குமாறு பல்கலைக்கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தவிர, பல நீதிபதிகள் தங்களுக்கு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இந்த விவகாரத்தை ஆராய்ந்த குழு, இந்த அமைச்சர்களின் குடியிருப்புகளை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் திட்டத்திற்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.

அந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள், அமைச்சர் வீடுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளனர்.

கொழும்பில் முப்பத்தைந்து அமைச்சர்களின் சொகுசு வீடுகள் உள்ளன.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X