2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

டிப்பர் மோதி ஒருவர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 12 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சென்ற வடமராட்சி கிழக்கு, மாமுனை, செம்பியன்பற்றைச்  சேர்ந்த 39 வயதான ஜே. நதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் டிப்பர் சாரதியை மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X