2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

சிறுமி வன்புணர்ந்து கொலை: ஐவருக்கு மரண தண்டனை

Freelancer   / 2025 ஜனவரி 25 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்தீஸ்கர் மாநிலத்தில், தந்தையின் கண்முன்னே, பழங்குடியின சிறுமியை குழுவாக சேர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த 5 பேருக்கு, மரண தண்டனை விதித்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சத்தீஸ்கரின் பஹாடி கோர்வா பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 2021ஆம் ஆண்டு, வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொலை செய்தது. மேலும், அந்த சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த தந்தை உள்ளிட்ட இருவரை கற்களால் அடித்து அந்த கும்பல் கொன்றது.

இது தொடர்பான வழக்கு கோர்பா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 அதில், நீதிபதி கூறியுள்ளதாவது:

“பழங்குடியின சிறுமியின் தந்தையின் கண்முன்னாலேயே 5 பேர் கும்பல் சிறிதும் ஈவுஇரக்கமின்றி இரக்கமின்றி வன்கொடுமையில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம். வக்கிரமான மற்றும் கொடூரமான இந்த செயலில் ஈடுபட்டதுடன் சிறுமியின் தந்தை மற்றும் சின்னஞ்சிறு குழந்தை ஒன்றையும் அந்த கும்பல் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளது.

“குற்றத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து, சந்த்ராம் மஞ்ச்வர் (49), அனில் குமார் சார்தி (24), பரதேசி ராம் (39), ஆனந்த் ராம் பனிக்கா (29), அப்துல் ஜாபர் (34) ஆகிய 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

“ஆறாவது குற்றவாளியான உமாசங்கர் யாதவ் (26) மீதான வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .