2025 மார்ச் 31, திங்கட்கிழமை

சாமரவுக்கு பிணை : விளக்கமறியலில் வைப்பு

Janu   / 2025 மார்ச் 27 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்ட பதுளை  மாவட்ட  பாராளுமன்ற  புதிய  ஜனநாயக முன்னணியின்  உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு  பிரதான  நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்குக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏனைய  இரண்டு வழக்குகளிலும். ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலமளிக்க   அவர்  இலஞ்சம்  அல்லது  ஊழல்  பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வியாழக்கிழமை (27) வருகை தந்திருந்தார்.

விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரை, கொழும் பிரதான  நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, ஒரு வழக்கில்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏனைய இரண்டு வழக்குகளிலும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊவா  மாகாண  அமைச்சராக  சாமர  சம்பத்,  இருந்த போது  நடந்ததாக  கூறப்படும் முக்கியமான மூன்று முறைகேடு  தொடர்பாக  விசாரணை  நடத்தப்படுவதாகவும்  கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X