2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சப்ரகமுவ ஆளுநர் நவீன்

Editorial   / 2023 ஜூன் 11 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ, ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவைக் கொண்டு நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

அவருக்கான நியமனக்கடிதம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

டிக்கிரி கொப்பேகடுவ தன்னுடைய ஆளுநர் பதவியை, கடந்த வியாழக்கிழமை (8) இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .