Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Simrith / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி, இன்று பாராளுமன்றத்தில் மற்றொரு சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றீர்கள். ஆனால் என்னால் 77 நாட்கள் கடந்தும் இந்த பாராளுமன்றத்தில் பேச முடியவில்லை" என்று அரச்சுனா தாக்கல் செய்த ஆவணத்தின் உள்ளடக்கங்களை மட்டுமே படிக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்திய போது அர்ச்சுனா கூறினார்.
ஜனவரி 20 ஆம் திகதி அனுராதபுரம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால், தனது அதிகாரப்பூர்வ பாராளுமன்ற அடையாள அட்டையை காட்ட முடியாமல் போனதால், தனது உரிமைகள் பாதிக்கப்பட்டதாக ராமநாதன் கூறினார்.
அவர் தனது சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, போக்குவரத்து அதிகாரிகள் அவரது வாகனத்தை இடைமறித்து, தெளிவான காரணத்தை வழங்காமல் அடையாள அட்டையைக் கோரினர்.
அவர் தன்னை ஒரு தமிழ் சிறுபான்மை பிரதிநிதி என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும், அதிகாரிகள் அவருக்கு அதிகாரப்பூர்வ பாராளுமன்ற அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு வலியுறுத்தினார்கள், ஆனால் அதுவரையில் அடையாள அட்டை அவருக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்ற சின்னம் கொண்ட 'அதிகாரப்பூர்வ விண்ட்ஸ்கிரீன் பாஸை' அவர் வழங்க முயன்ற போதும் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை என்று ராமநாதன் கூறினார்.
இந்த சம்பவத்தை தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் என்று கூறிய ராமநாதன், தனக்கு முறையான அடையாள அட்டை வழங்கத் தவறியதற்காக பாராளுமன்றத்தை விமர்சித்தார். "இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இது மட்டுமே என்னிடம் இருக்கும் ஒரே ஆவணம் என்பது வெட்கக்கேடானது. 21 ஆம் திகதி அடையாள அட்டை அல்லது பாராளுமன்ற பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகுதான், 22 ஆம் திகதி காலையில், அது எனக்கு வழங்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
ராமநாதன் தனது உரையைத் தொடர்ந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைப்பதாக அர்ச்சுனா மீது குற்றம் சாட்டினார்.
"ஒருபுறம், அவர் பாராளுமன்றத்தை குறை கூறுகிறார். பின்னர் அவர் இனப் பிரச்சினைகளை எழுப்புகிறார், நாங்கள் ஒருபோதும் பயன்படுத்தாத 'சிறுபான்மை' போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். அவருக்கு மனநலக் கோளாறு உள்ளது; அவரை மருத்துவரிடம் அனுப்ப வேண்டும். இது தொடர அனுமதிக்காதீர்கள்," என்று ஜெயசேகர சபாநாயகரை வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், எம்.பி. ராமநாதனுக்கு எதிராக போக்குவரத்து விதிமீறல் முறைப்பாடு அளிக்கப்பட்டதை நினைவூட்டினார். " எம்.பி. அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ராமநாதனின் பேச்சுரிமையைத் தீர்ப்பது எதிர்க்கட்சியின் பொறுப்பு என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கூறினார். "எம்.பி. சிறப்புரிமைப் பிரச்சினையைப் பயன்படுத்தி வேறு ஒரு விஷயம் குறித்த கவலைகளை எழுப்புகிறார்," என்று அவர் கூறினார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் சமர்ப்பித்த விஷயத்திற்குப் பொருத்தமற்ற விஷயங்களை ஹன்சார்டில் இருந்து நீக்கவும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago