2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

சகோதரனும் உளவு பார்த்தார்: போட்டு உடைத்தார் துலான்

Editorial   / 2024 ஜூலை 10 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல வர்த்தகரான 'கிளப் வசந்த' என்றழைக்கப்படும்  வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சயிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலையாளிகளுக்காக காத்திருந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து தனது சகோதரனும் உளவு பார்த்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விசாரணையில் அவருக்கும் கொலைத் திட்டத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் பச்சை குத்துவதற்கு படித்திருந்தாலும், ஒரு ஸ்தாபனத்தை திறக்க முடியாத நிலையில், பாதாள உலக உறுப்பினர் ஒருவர் அவருக்கு 16 இலட்சம் ரூபாவை கொடுத்து இந்த நிறுவனத்தை ஆரம்பிக்க ஆதரவளித்தார்.

இதன் திறப்பு விழாவுக்கு சுரேந்திர வசந்த பெரேராவை அழைத்து வர வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. .

இந்த கொலையுடன் தொடர்புடையவர்களில் பெரும்பாலானோர் பலப்பிட்டிய மற்றும் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X