2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கொழும்புக்கு அண்மையில் பஸ் விபத்து: 10 பேர் படுகாயம்

Janu   / 2024 ஜூலை 15 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலங்கம - கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர் .

காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய 177 இலக்க பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

 இலக்கம் 190 மீகொட - புறக்கோட்டை மற்றும்  இலக்கம் 177 கடுவளை - கொள்ளுப்பிட்டி பயணிக்கும் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகின .

மீகொடயிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்து பத்தரமுல்லை தலாஹேனையை கடந்து பயணிக்கும் போது, ​​கடுவளையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற பேருந்து  பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X