Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களின் ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் கொள்ளையடிக்க முயலும் அரசாங்கம் இன்னும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
உடுதும்பர, ஹசலக்கவில் நேற்று (13) காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், இலங்கை இதுவரை நிதி உதவி கோரவில்லை என சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் எனினும் நாணய நிதித்திடம் அரசாங்கம் பேசியதாக கூறப்படுகிறது என்பதும், இதில் உண்மையைச் சொல்வது யார் என்பது குறித்து நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பொய்யினாலேயே இந்த அரசாங்கம் தனது இருப்பை பாதுகாத்து கொள்கின்றது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களை ஏமாற்றுவதே அவர்களின் அவ்வப்போதைய நிகழ்ச்சி நிரல் எனவும் தெரிவித்தார்.
சீனியின்றி தேனீர் அருந்துவோம், மிளகாயின்றி ரசம் உண்போம், புல்லையேனும் நாம் உண்போம் என்று வரலாற்றில் சிலர் கூறியதாகவும் நினைவூட்டினார்.
அன்று போலவே இன்றும் பசளையின்றி விளைச்சல் பெறுவோம், நெல்லின்றிசோறு சாப்பிடுவோம், மின்சாரமின்றி நாம் வாழ்வோம் என்று பொறுமையுடன் மக்கள் இன்று வாழ்வார்கள் என அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது போலவும் என்றும் குறிப்பிட்டார்.
உங்களுக்கு உரம் தராத அரசாங்கம் இன்னும் ஆட்சியை தொடரவேண்டுமா? ஒவ்வொரு வீட்டுக்கும் கேஸ் குண்டைக் கொடுத்த அரசாங்கம் இன்னும் தொடர வேண்டுமா? நாடுமுழுவதும் மக்கள் வரிசையில் நிற்கும் நிலையிக்கு இந்நாட்டை உருவாக்கிய அரசாங்கம் இன்னும் தொடரவேண்டுமா? என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், உங்களின் ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் கொள்ளையடிக்க முயற்சிக்கும் அரசாங்கம் இன்னும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா? ஆட்சிக்கு வந்த உடனயே பணக்கார குபோரர்களுக்கு வரிச்சலுகை அளித்துநாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த இந்த கொடூர அரசாங்கம் இன்னும் தொடர வேண்டுமா? என்றும் கேள்வியெழுப்பினார்.
கொரோனாவில்15,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுக்கும் வரை கட்டுக்கதைகளின் பிரகாரம் பணியாற்றியஅரசாங்கம் இன்னும் ஆட்சியில் தொடர வேண்டுமா? என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கேள்விஎழுப்பினார்.
கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனவும், அதன் பின்னர் அடுத்த தலைமுறையின் பிரச்சினைகளுக்கு விடை தேடும், திறமை, ஆற்றல் மற்றும் இயலுமைக்கு இடமளிக்கும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர், இதனை மேற்கொள்ள தற்போதுள்ள மாற்று சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago