2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

காலி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Editorial   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி, யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் பலியானதுடன் 4 வயது பிள்ளை உட்பட மற்றுமொருவர் காயமடைந்துள்ளனர்.

கறுவா பட்டை வாடிக்குள் வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் காலி, கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே, ரி-56 ரக துப்பாக்கியின் ஊடாக துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

மரணமடைந்த நபர், மனித படுகொலை வழக்கின் சந்தேகநபர் எனத் தெரிவித்த பொலிஸார், கருவலகல பிரதேத்தில் பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது என்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .