2024 ஒக்டோபர் 05, சனிக்கிழமை

கால்வாய்க்குள் பாய்ந்த பாரவூர்தி

Freelancer   / 2024 ஜூலை 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்கையில் இருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த பாரவூர்தியொன்று ஹங்வெல்ல எம்புலுகம சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதிக் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .