Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2025 மார்ச் 25 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.பி.கபில
மோசடியான கனேடிய விசாகளைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 11 இலங்கையர்களும் 35 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அரசாங்க ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள். என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
துபாய்க்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL-225 ஏறுவதற்காக அவர்கள் திங்கட்கிழமை (24) மாலை 6.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து கனடாவின் டொராண்டோ செல்ல திட்டமிட்டிருந்தனர் என்பதும் விசாரணைகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
47 minute ago
51 minute ago