Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 மே 05 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகா வித்தியாலயத்தில் பத்தாம் தரம் படிக்கும் மாணவன் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துக்கு இலக்கான ஒன்பதாம் தர மாணவன் வத்துபிட்டியலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரே மாணவியுடன் இரண்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட காதல் உறவின் அடிப்படையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய காதலியான மாணவி மற்றுமொரு மாணவனை காதலிக்கின்றாள் என்பதை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவன், ஒன்பதாம் வகுப்பு மாணவனை பாடசாலை முடிந்ததும் பாடசாலைக்கு முன்பாக வைத்து தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கத்தியால் தோள்பட்டை பகுதியில் காயமடைந்த மாணவன் பின்னர் வத்துப்பிட்டியால ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago