2025 மார்ச் 22, சனிக்கிழமை

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் மற்றுமொரு இளைஞன் கைது

Freelancer   / 2025 மார்ச் 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் 23 வயதுடைய ஜூலியன் மாதவன் என்ற மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, இதுவரை இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X