2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

எல்ல ஒடிசி விவகாரம்: விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

J.A. George   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல ஒடிசி டிக்கெட் மோசடி தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, தொலைபேசி பதிவுகள் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல்களை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID)கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தது.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வதில் ரயில் நிலைய அதிபர்கள் அல்லது ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிஐடி தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், விசாரணையை விரைவுபடுத்துமாறு சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .