2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா - வலப்பனை - படகொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 21 மாணவர்கள், இன்று காலை, திடீர் சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாகவே, மாணவர்கள் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுகயீனமுற்ற மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.(AN)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .