Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை
Simrith / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முன்னணியில் இருப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 3வது இடத்தில் பின்தங்கியுள்ளதாகவும் பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“ செப்டெம்பர் 22ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது, இருவரில் ஒருவர் (சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸாநாயக்க) இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார் ” என சர்வதேச நடப்பு விவகாரங்கள் சஞ்சிகை, தி டிப்ளோமேட் இலங்கை பற்றிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் “டெக்கான் ஹெரால்ட்” கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் NPP இன் அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது, “சஜித் மற்றும் அனுர ஆகியோர் தலா 35 சதவீத வாக்குகளைப் பெற முடியும், அதே நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க 24-25 ஐப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.”
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்குக்கு இந்தத் தேர்தல் செல்லலாம் என பல சர்வதேச தகவல்கள் கணித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
41 minute ago
3 hours ago
5 hours ago