2025 மார்ச் 06, வியாழக்கிழமை

அந்த இரகசிய சந்திப்பு பற்றி தெரியுமா?

Simrith   / 2025 மார்ச் 06 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 முன்னாள் அரசாங்க அமைச்சர் உட்பட சில முக்கிய முன்னாள் அரச அதிகாரிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதி குறித்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், விசனம் எழுப்பியுள்ளார். 

பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன், இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஜிபி தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு முக்கிய முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான வியாபார இடத்தில் நடந்த கூட்டம் குறித்து அரசாங்கத்திற்குத் தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார். 

"இது ஒரு தீவிரமான பிரச்சினை. இராணுவப் புலனாய்வு முன்னாள் பணிப்பாளர் பிரிகேடியர் (ஓய்வு பெற்ற) சூல ரத்னசிறி கொடித்துவக்கு மற்றும்  கொழும்பு குற்றப்பிரிவு (சிசிடி) முன்னாள் பணிப்பாளர் ஏஎஸ்பி நெவில் சில்வா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்," என்று அவர் தெரிவித்தார். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் அவரால் அதில் கலந்து கொள்ள முடியாததால், அவரது நெருங்கிய கூட்டாளியான இனியபாரதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் கூறினார். 

"இனியபாரதி கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தங்கியிருந்தார். சுதா என்ற நபரால் அவர் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இனியபாரதி கொலைகள் உட்பட பல முந்தைய குற்றங்களில் ஈடுபட்டதாக அறியப்பட்ட நபர். பிள்ளையான் பற்றிய விவரங்களும் உள்ளன," என்று அவர் கூறினார். 

பாதாள உலகக் குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரையும், இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனையும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அரசாங்கம் எதிர்கொள்கிறதா என்று எம்.பி சாணக்கியன் கேள்வி எழுப்பினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .