2024 ஒக்டோபர் 22, செவ்வாய்க்கிழமை

”IMF உடன் பேச்சுவார்த்தை நடாத்த எம்மால் முடியும்”

Simrith   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, மக்களின் நன்மை கருதி சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை குறித்து தமது கட்சியால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் அதைக் கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் செய்யத் தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொரளையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரேமதாச, எதிரணியில் இருந்தும் SJB சர்வதேச நாணய நிதியத்துடன் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டு பல புரிந்துணர்வுகளை எட்டியுள்ளது என வலியுறுத்தினார்.

2028 ஆம் ஆண்டுக்குள் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கை போராடி வருவதால், பொருளாதார நிலைமை சவாலானதாக உள்ளது என்றும், அதற்கு வலுவான பொருளாதார வளர்ச்சி மூலோபாயம் ஒன்று தேவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .