2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

AIஇல் ஆசிரியையை நிர்வாணப்படுத்திய மாணவர்கள்

Freelancer   / 2025 மார்ச் 14 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து, கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அந்த பாடசாலையில் 10ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்கள், பாடசாலையில் ஒரு இளம் பெண் ஆசிரியையின் முகத்தின் புகைப்படங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்த சம்பவம் ஆசிரியரால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவர் கண்டி பொலிஸாரை அணுகி, சம்பவம் தொடர்பாக பிரதேச குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், கண்டி பிரிவு சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பாடசாலைக்குச் சென்று, மாணவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மடிக்கணினி மற்றும் இரண்டு அலைபேசிகள் கைப்பற்றி விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கண்டி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்  அனுருத்த பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், பிரிவு சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .