2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

30 நிகழ்வுகளை நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

Freelancer   / 2024 ஜூலை 24 , பி.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தலையீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 30 நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆணைக்குழுவின் உத்தரவால் நிறுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி நெருங்கி வருவதால் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் அரசியல் தலையீடுகள் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கான பொருட்கள் விநியோகம், நியமனங்கள் உள்ளிட்ட பலவேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் சுதந்திர தேர்தலுக்கு இடையூறாக நடக்கும் சம்பவங்களை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகாரிகள் குழு இதில் கடும் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X