2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

24 மணித்தியாலங்களில் 656 பேர் கைது

J.A. George   / 2024 பெப்ரவரி 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேக நபர்களில் 16 சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளனர்.

இதேவேளை, 241 கிராம் ஹெரோயின், 139 கிராம் ஐஸ், 1 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1,521 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .