Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க
காட்டு யானைகளைப் பார்வையிடும் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாகக் காணப்படும் கவுடுல்ல தேசிய வனவிலங்குப் பூங்கா, இந்நாட்களில், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பிரயாணிகளால் நிரம்பியுள்ளது.
சுமார் 6,200 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த வனவிலங்குப் பூங்காவினால், இவ்வருடத்தில் (2017) மாத்திரம், 2,560 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதென, அதன் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜே.கே.ஹேரத் தெரிவித்தார்.
8,300 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட கவுடுல்ல மின்னேரிய நுழைவும் மேலும் 8,300 ஹெக்டேயர் நிலப்பரப்கைக் கொண்ட மின்னேரியா தேசிய வனவிலங்குப் பூங்காவும், 9,100 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட சோமாவதிய தேசிய வனவிலங்குப் பூங்கா ஆகிய வனவிலங்குப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளதால், கவுடுல்ல தேசிய வனவிலங்குப் பூங்காவுக்கான உல்லாசப் பயணிகளின் வருகை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.
விசாலமான முறையில் அமைந்துள்ள சோமாவதிய தேசிய வனவிலங்குப் பூங்கா காரணமாக, நாளொன்றில் 500 முதல் 600 வரையான உல்லாசப் பயணிகள், காட்டு யானைகளைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் கிட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago