2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

வீதி ஊர்வலம்

Janu   / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எலிக்காய்ச்சல்  நோய் தொடர்பாக  பொது மக்களுக்கு  விழிப்புணர்வூட்டும் வீதி ஊர்வலம்  திங்கட்கிழமை (30)  அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை  சுகாதார  வைத்தியதிகாரி  அலுவலகமும்,  அட்டாளைச்சேனை  கமநல  சேவை  மத்திய நிலையமும்   இணைந்து  ஏற்பாடு  செய்த  விழிப்புணர்வூட்டும்  வீதி ஊர்வலம் சுகாதார  வைத்தியதிகாரி  டாக்டர் ஏ.எம்.இஸ்ஸதீன்  தலைமையில்  அட்டாளைச்சேனை  சந்தை  சதுக்கத்தில்  ஆரம்பமான  வீதி  ஊர்வலம்  சுலோபங்களை  ஏந்திய  வண்ணம்  பிரதான வீதி ஊடாக சென்று  வைத்தியசாலையை சென்றடைந்தது.

எலிக்காய்ச்சல்  நோய் தொடர்பாக  விவசாயிகளுக்கும்,  மக்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டு  துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

வேளாண்மை   செய்கையில்  ஈடுபடும்  விவசாயிகள்  மற்றும்  உப உணவுப்  பயிர்ச் செய்கையில்  ஈடுபடுபவர்களுக்கு  இந் நோய்  அதிகமாக பரவும்  அபாயம்  ஏற்பட்டுள்ளதாகவும் . அவதானமாக செயற்படுமாறு  சுகாதார  வைத்தியதிகாரி  டாக்டர் ஏ.எம்.இஸ்ஸதீன்  தெரிவித்தார்.

உடலில் வெட்டுக் காயங்கள், சிராய்ப்புகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத அளவிலான நுண்ணிய காயங்கள் மூலமும், வயலுக்கு அண்மையாக காணப்படுகின்ற நீரோடைகளில் குளிக்கும் போது கண்களிலுள்ள நுண்ணிய இழையங்கள் மூலமும் இந்த பற்றீரியா எமது உடலினுள் உட்புகுகிறது.

எலிக்காய்ச்சல்  பரவாமல்  தடுப்பது  தொடர்பாக விவசாயிகளுக்கும், விவசாய போதனாசிரியர்களுக்கும்   பொதுச் சுகாதார  பரிசோதகர்களால்  விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

காய்ச்சல்,  தசைகளில்  கடுமையான வலி,  கண் விழி  சிவப்பு நிறம்  அடைதல், சிறுநீர் வெளியேற்றம்  குறைவடைதல்,  சிறுநீருடன் இரத்தம்  வெளியேறுதல் குறித்த நோயின் அறிகுறிகளாகும்.

ஒரு நபரிடம்  இருந்து  இன்னொருவருக்கு  நேரடியாக  பரவுவதில்லை.  எனவே  அதிக  தொற்றுக்குள்ளாக  கூடிய வயல்  வெளிகளில்  பணி புரிவோர்  அவதானமாக  இருக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இவ்வாறான  அறிகுறிகள்  காணப்பட்டால்  விவசாயிகள்  சுகாதார  வைத்தியதிகாரி  அலுவலகத்துடன்  அல்லது  தத்தமது பொதுச்  சுகாதார  பரிசோதகர்களுடன்  தொடர்பு கொண்டு  நோய் தடுப்பு தொடர்பான மாத்திரைகளை  பெற்றுக் கொள்ளுமாறும்,  கொதித்தாறிய நீரை பருகுமாறும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 எம்.எஸ்.எம்.ஹனீபா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X