2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

வர்த்தகர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்

Janu   / 2024 ஜூலை 04 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை  மாவட்டத்தில்  கடந்த  ஜுன்  மாதம்  நுகர்வோர்  பாதுகாப்புச்  சட்டத்தை  மீறி  வியாபார  நடவடிக்கைகளில்  ஈடுபட்டு  வந்த  59 வர்த்தகர்களுக்கு  நீதிமன்றங்களினால்  2 20 500 ரூபாய்  அபராதம்  விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்  அம்பாறை  மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார வியாழக்கிழமை (04) தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை,  தெஹியத்தக்கண்டி  ஆகிய  நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள்  அதிகார சபையின்  புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில்  நுகர்வோர்  பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில்  ஈடுபட்ட  100  வர்த்தகர்கள்  கண்டுபிடிக்கப்பட்டு,  இதில் 59 வர்த்தகர்களுக்கு  எதிராக  நீதிமன்றங்களில்  வழக்கு  தாக்கல் செய்யப்பட்டதாகவும், இவ்  வர்த்தகர்களுக்கு  02 இலட்சத்தி 20 ஆயிரத்தி 500 ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்கள்  விற்பனை  செய்யப்படுவதாக  நுகர்வோர்கள் செய்த  முறைப்பாட்டையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்  புலனாய்வு உத்தியோகத்தர்கள் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

அத்தியவசியப் பொருட்களுக்கு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட  விலையை  விடகூடுதலான  விலைக்கு பொருட்களை விற்பனை  செய்தமை,  நுகர்வோர்  நலன்  கருதி  வர்த்தக நிலையங்களில்  விலைப்பட்டியலை  காட்சிப்படுத்தாமை,  நுகர்வுக்குப்  பொருத்தமில்லாத  பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான பொருட்கள் மற்றும்  தரமற்ற  பொருட்களை  விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றுதல்,  மின்  உபகரணங்களுக்கான  கட்டுறுதிக்  காலத்தை  வழங்காமை போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கெதிராகவும் நீதிமன்றில்  வழக்குத் தாக்கல் செய்ததாகவும்  தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.ஹனீபா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .