2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

மாடு மேய்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

Editorial   / 2025 ஜனவரி 27 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்க்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர்  திங்கட்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுடன் 3 பேர்   ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் மாடு மேய்க்கச் சென்றுள்ள நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை  மலம் கழிக்க சென்ற நிலையில் அவர் அங்கு விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .