2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

மரத்தில் ஏறியவர் மரணம்

Janu   / 2024 ஜூன் 26 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் , மா மரமொன்றில் ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி - மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பாறூக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

நாவலடியிலுள்ள தனது வளவினுல் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பரிக்க மரத்தில் ஏறியபோது மரத்திலிருந்து தவறி விழுந்த குறித்த நபர் , படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்த நபரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .