2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

பாரிய விபத்து ; தொலைபேசி சேவைகள் துண்டிப்பு

Janu   / 2024 ஜூலை 14 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான எரிபொருள் பௌஸர் ஒன்று , புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளாகியது. 

இவ் விபத்து ஞயிற்றுக்கிழமை (14) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .

விபத்தில் சிக்கிய எரிபொருள் பௌஸரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வீதியோரமிருந்த தனியார் வளாகத்தின் மதில்ப்பகுதியும் சேதத்துக்குள்ளாகி , இலங்கை ரெலிக்கொம் தொலைத்தொடர்பு வலையமைப்பின் தூண்களும் உடைந்துள்ளது .

இதனால் குறித்த பிரதேச தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது

மேலும் , இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X