2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

எம்.சீ.ரஸ்மின் எழுதிய போர்க்கால சிங்கள இலக்கியங்கள்: ஒரு பன்மைத்துவ ஆய்வு நூல் வெளியீடு

Super User   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.சீ.ரஸ்மின் எழுதிய போர்க்கால சிங்கள இலக்கியங்கள்: ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983 - 2007) எனும் நூல் வெளியீடும் அதனை மையமாகக் கொண்டு மீளிணக்கச் செயற்பாட்டில் சிங்கள இலக்கியங்களின் வகிபங்கு பற்றிய உரையாடலும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இவ்விரு நிகழ்வுகளும் பேராசரியர் எம்.எஸ்.எம்.அனஸ் தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேச நாணயக்கார பிரதம அதிதியாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத் தழிழ்துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதநிலை விரிவுரையாளர் பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.

ருஹூன பல்கலைக்கழகத்தின் சிங்களத்துறை விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க சிங்களத்தில் நூலறிமுகத்தையும் கே.எஸ்.சிவகுமாரன் ஆங்கிலத்தில் நூலறிமுகத்தினையும் மேற்கொண்டனர். இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இந்த நூலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த ஆய்வு நூலினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 75 பொது மற்றும் பாடசாலை நூலகங்களுக்கு நீலன் திருச்செல்வம் நம்பிக்கைப் பொறுப்பு அன்பளிப்புச் செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவின்போது நீலன் திருச்செல்வம் நம்பிக்கைப் பொறுப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஆர். கோகிலநாத் நூலின் பிரதியொன்றை அமைச்சர் வாசுதேச நாணயக்காரவிடம் ஒப்படைத்தார்.

நீலன் நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனம் பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக விழுமிகங்களை யுத்தத்திற்கு பிந்திய காலப்பகுதியில் மிகவும் அக்கறையுடன் ஊக்குவித்து வருகின்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .