2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் முறாசிலின் நூல் வெளியீடு

Super User   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எம்.ஏ.பரீத்


ஊடகவியலாளர் மூதூர் முறாசிலினால் எழுதப்பட்ட முஸ்லிம்களும் சமகாலப் பிரச்சினைகளும் சில பதிவுகள்: பாகம்-1  எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

மூதூர் அல் - ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஓய்வுபெற்ற அதிபரும் எழுத்தாளருமான ஏ.நயிமுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூல் அறிமுக உரையை எழுத்தாளரும் அதிபருமான ஏ.எஸ்.உபைதுல்லாவும் நூல் ஆய்வுரையை உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸிலும் நிகழ்த்தினார்.

நூல் வெளியீட்டு உரையை ஊடகவியலாளர் ஆர்.எப்.அரூஸ் வழங்க நேயம், குரல் ஆகிய செய்தி இதழ்களின் ஆசிரியர் எம்.எஸ்.எம். நியாஸின் சிறப்புரையும் இடம்பெற்றது.

விழா நிகழ்வுகளை எழுத்தாளர் ஏ.எஸ்.அப்துல்லா (ஆசிரியர்) தொகுத்து வழங்கினார். இதன்போது நூலின் முதற் பிரதியை முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீக் (திடீர்), சிறப்பு பிரதியை நூலாசிரியரின் தந்தையான சாகுல்ஹமீட் மற்றும் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் எச்.எம்.ஹரீஸ் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .