2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மாணவர்களின் சித்திரக் கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்ஜன்


ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சித்திரக் கண்ட்சி   நேற்று முதல் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

மலையக மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்திருந்த இந்த சித்திரக் கண்காட்சியில் 1300 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனை ஹைலன்ஸ் கல்லூரியின் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்கள் வரைந்துள்ளனர்.

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிகொணரும் வகையில் அமைந்த இந்த சித்திரக் கண்காட்சி அனைவரதும் பாரட்டை பெற்றது. 

இதனை பார்வையிட பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சி நாளை நிறைவடைய உள்ளது.




You May Also Like

  Comments - 0

  • RICHWAY SIR Saturday, 06 July 2013 03:01 PM

    நன்றிகள் பல...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .