2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் நால்வர் விழா

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (நவரத்தினம்)
வவுனியா தமிழ் சங்கம் நடாத்தும் நால்வர் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தின் கலாசார மண்டபத்தில் சங்கத்தின் நடைபெறவுள்ளது.

சங்கத்தின் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் போது நான்கு நாயன்மார்களின் திரு விக்கிரகங்கள் ஆதி விநாயகர் ஆலயத்தில் இருந்து விழா மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கு விவிதவித்யன் சிவஸ்ரீ சிதம்பர திவாகர குருக்களினால் திருவடி வழிபாடு இடம்பெற்று க.குலேந்திரனால் திருமுறைகள் ஓதப்படும்.

இதனை அடுத்து விழாவின் தொடக்கவுரையினை வவுனியா தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் வை.சத்தியநாதன் ஆற்றவுள்ளதுடன் சிறப்புரையினை வவுனியா மெய்கண்டான் ஆதினத்தின் குருமகா சன்நிதானத்தின் ஸ்ரீலஸ்ரீ சிவக்கொழுந்து சிவதேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் 'வையகம் துயர் தீர்கவே' என்ற தொனிபொருளில் ஆற்றவுள்ளார்.

இதேவேளை, கலா மண்டபம் நிறுவக்காரணமான அமரர் திருமதி பாலாம்பிகை தேவராசாவின் நினைவாக நால்வர் நற்றமிழ் என்ற தொனிப்பொருளில் வவுனியா சேக்கிழார் மன்றத்தின் தலைவர் க.ஐயம்பிள்ளை தலைமையில் கருத்தரங்கமும் வவுனியா சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் அறநெறி பாடசாலை மாணவர்களால் 'நால்வர் சந்தித்தால்' என்ற தொனிப்பொருளில் 'வேடம் புனைந்து' உரையாடலும் இடம்பெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .