2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பேராசிரியர் சி.சிவசேகரத்தின் 'குழந்தையும் தேசமும்' நூல் வெளியீட்டு விழா

Super User   / 2012 ஜனவரி 30 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேராசிரியர் சி.சிவசேகரம் எழுதிய 'குழந்தையும் தேசமும்' சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கிய பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

அப்பேரவையின் செயலாளர் சோ.தேவராஜா தலைமையில் நடைபெற்றஇவ்விழாவில் 'தாயகம்' பிரதம ஆசிரியர் க. தணிகாசலம் அறிமுகவுரை நிகழ்த்தினார். சிறுகதை, நாவலாசிரியை தாமரைச் செல்வி சிறப்புரையினரையும் தனுஜன் நன்றியுரையினையும் நிகழ்த்தினர்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 113 ஆவது வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
க. தணிகாசலம் அறிமுகவுரை நிகழ்த்துவதையும் சிறுகதை நூலாசிரியர் சி.சிவசேகரம் ஏற்புரை நிகழ்த்துவதையும் இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.


 


You May Also Like

  Comments - 0

  • jinnah sherifudeen Tuesday, 31 January 2012 11:01 PM

    பேராசிரியர் அவர்களின் பணி மென்மேலும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் -
    ஜின்னாஹ் ஷரிபுதீன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .