Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு, மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்று வரும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பண்டிகை கங்கேஸ்வரி கந்தையா அரங்கில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெய்னுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பிரதிச் செயலாளரும் ஜி.ஐ.சற் நிறுவனத்தின் சிரேஷ்ட நிபுணத்துவ ஆலோசகருமாகிய எஸ்.தண்டாயுதபாணி பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பிரதிச் செயலாளர் ஏ.எம்.ஈ.போல், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி சி.பாக்கியராசா,பட்டிருப்பு வலயக் கல்விப் பணி;பாளர் திருமதி என்.புள்ளநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சா.பவளகாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி; இலக்கிய வாதிகள், கலைஞர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago