2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

திருகோணமலையில் 2 பக்தி நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2012 மே 07 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

கலாபூஷணம் செல்வி மணிமேகலாதேவி கார்த்திகேசுவின் இரண்டு பக்தி நூல்களான பக்திப்பாமாலை பாகம் 2, திருமுறைப்பண்ணிசை விளக்கம் தரம் 4 ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூhரியில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதீனகர்த்தா வேதாகமமாமணி சிவஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்கள் நூல்களின்  முதலாவது பிரதிகளை ஸ்ரீஸ்வஸ்தானந்தாஜியி;டமிருந்து பெற்று வெளியிட்டுவைத்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உதவிப்பணிப்பாளர் க.அன்பழகள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X