2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வெசாக் கூடுகளுக்கு மின்சாரம் வழங்கியவர் மரணம்

Janu   / 2024 மே 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் கூடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கெபத்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

மரதன்மடுவ, கபுகொல்லாவை சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய என்.ஏ.பதிராஜ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

விகாரையில் பொருத்தப்பட்டிருந்த வெசாக் கூடுகளுக்கு மின்சாரம் வழங்க முற்பட்ட போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் , மின்சாரம் தாக்கியதில் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கெபத்திகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார் என   கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .