2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வீதி விபத்தில் ஒருவர் பலி

Janu   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி - ஏத்தாளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாலக்குடா- கரடிப்பானி வத்தையைச் சேர்ந்த தெஹிவலகே ஜானக ஏரங்க கொஸ்தா  (வயது 37) என்பவர் உயிரிழந்துள்ளார்.

தலவில பகுதியில் இருந்து நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியுடன்  மோட்டார் சைக்கிள் மோதியதில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதியை அங்கிருந்தவர்களால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக  வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .