2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

Janu   / 2024 ஜூன் 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிரியாகம, திக்வெண்ணாகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேனவிரத்ன முடியன்செலாகே பசிந்து காஞ்சன என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை புதன்கிழமை (26) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .