2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மரக்கிளையினால் பறிபோன உயிர்

Mayu   / 2023 டிசெம்பர் 13 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை திக்தலாவ பகுதியில் மகன்  மரம் வெட்டியதால் தந்தை உயிரிழந்துள்ளார்.

மொனராகலை திக்தலாவ நெல்லிகெலேலை வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.குணவர்தன (வயது 75) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகன் வீட்டின் அருகிலுள்ள பலா மரத்தை வெட்டிக் கொண்டிருந்த போது, ​​பலா மரத்தின் கிளை ஒன்று முறிந்து தந்தையின் தலையில் விழுந்துள்ளது,இதனால் தலையில் பலத்த அடிபட்டு, மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சுமணசிறி குணதிலக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .