2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தகாத உறவால் பறிபோன உயிர்

Janu   / 2024 ஜூன் 23 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுவன, அமுதமன பிரதேசத்தில் 41 வயதுடைய நபரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23) காலை இடம்பெற்றதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்தனர்.

விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற , அமுதமன பகுதியைச் சேர்ந்த செனரத்கே நவிந்த தேசப்பிரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் ஒருவரே இக் கொலை செய்துள்ளார் எனவும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் ,உயிரிழந்தவரின் தகாத உறவே கொலை சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .