2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

ஒருதொகை பீடி இலைகள் கைப்பற்று

Mayu   / 2024 ஜூலை 18 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - குடாவ கடற்பிரதேசத்தில் காட்டுப்பகுதிக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் புதன்கிழமை (17) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கைவிடப்பட்டிருந்த நிலையில் 7 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 226 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 226 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X