Editorial / 2022 பெப்ரவரி 04 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

42ஆவது ஆண்டினில் கால்பதித்திருக்கும் புதிய அலை கலை வட்டம் இவ்வாண்டுக்கான எவோட்ஸ்-2022 கலை, கலாசாரப்போட்டிகளை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கவிதைப் போட்டியை நடத்த முன்வந் துள்ளது. நாடாளவியரீதியில் நடத்தப்படும் இப்போட்டிகளுக்கான நிபந்தனைகள் வருமாறு-
1) உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்பலாம்.
2) கவிதைகள் மரபுக்கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ இருக்கலாம்.
3) கவிதைகள் 12 வரிக்கு குறையாமலும் 24 வரிக்கு மேம்படாமலும் இருத்தல் வேண்டும்
4) அனுப்பப்படும் கவிதைகளுடன் பெயர், முகவரி தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
5) ஒருவர் ஒரு ஆக்கத்தை மட்டுமே அனுப்பவேண்டும். ஆக்கம் ஏதேனும் ஊடகங் களிலோ மற்றும் பதிவாக்கங்களிலோ இடம் பெற்றிருக்கக்கூடாது. கவிதை எதிர்வரும் 22.02.2022 திகதிக்கு முன்னர் கிடைக்கவேண்டும்.
6) அனுப்பவேண்டிய இணையவழிகள் puthiyaalaikalaivaddam1980 @ g mail . com மற்றும் 075 4880172 என்ற இலக்கத்தின் ஊடான whatsapp இலக்கத்திற்கும் அனுப்பலாம்
7) வயதெல்லை 40 வயது உட்பட்டவர்கள் - நடுவர்கள் முடிவே இறுதியானது.
முதல்பரிசு - சான்றிதழ் மற்றும் 5,000ரூபாய் பணப்பரிசு, இரண்டாம் இடம் - சான்றிதழ் மற்றும் 3,000ரூபாய் பணப்பரிசு, மூன்றாம் பரிசு - சான்றிதழ் மற்றும் 2,000ரூபாய் பணப் பரிசு, வெற்றியாளர்களுக்கான விருது 30.01.2023 அன்று வழங்கப்படும்.
மேலதிக விபரங்களைப் பெற 076 2002701, 077 6274099 மற்றும் 077 7412604 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025