2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகள் மீட்பு

Mayu   / 2024 ஜூலை 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.ஆர்.லெம்பேட்

வங்காலை  கடற்கரையில் இருந்து பீடி இலைகள்  கொண்ட பொதிகள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்ட போது திங்கட்கிழமை (8) காலை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட மூடைகள் மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காலை கடற்கரையில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட பொதிகள் ஏற்றப் படுவதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.



குறித்த தகவல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ்.சந்திரபால வின் பணிப்புரைக்கு அமைவாக   பொலிஸ் அத்தியட்சகர் (1) ஹேரத்தின் வழி நடத்தலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சில்வா தலைமையில் சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வங்காலை கடற்கரையில் வாகனம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள் ஏற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.



80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதோடு மீட்கப்பட்ட பீடி இலை மூடைகள்,வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வங்காலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும்,மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X