2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

1940கி.கி கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை கஹகுருல்லன் பலஸ்ஸ பகுதியில் 1940கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேக நாபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர்  நேற்றைய தினம் (13) தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 1940 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கஹகுருல்லன் பலஸ்ஸ சூரியார பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும், கைப்பற்றிய கஞ்சா பொதியையும் சந்தேக நபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமணசிறி குணதிலக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .