2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது விம்பிள்டன்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் புத்தளத்தில் நடாத்தப்பட்டு வந்த புத்தளம் கால்பந்தாட்ட லீக் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் வெற்றிக் கிண்ணத்தொடரில்,  
புத்தளம் நகரின் மிகவும் பழைமை வாய்ந்த அணியாகத் திகழும் விம்பிள்டன் கழகம் சம்பியனானது.

லெஜன்ட்ஸ் கழகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியானது புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை (26) நடைபெற்றபோது 2-1 என்ற கோல் கணக்கில் நியூ ஸ்டார்ஸ் கழகத்தை வென்றே விம்பிள்டன் சம்பியனானது.

விம்பிள்டன் சார்பாக, முஹம்மது நிப்லான், முஹம்மது ஹம்தான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, நியூ ஸ்டார் சார்பாகப் பெறப்பட்ட கோலை அவ்ஸாப் பெற்றார்.

இத்தொடரின் சிறந்த கோல் காப்பாளாராக விம்பிள்டனின் கோல் காப்பாளர் முஹம்மது இம்ரான் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X