பேரின்பராஜா சபேஷ் / 2019 மே 26 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான எல்லே தொடரில் ஏறாவூர்ப்பற்று சார்பாக பங்குபற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் சம்பியனானது.
கல்லடி சிவானந்தா மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச இளைஞர் கழகத்தை வென்றே கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச இளைஞர் கழகம் வழங்கப்பட்ட 30 பந்துகளில் ஐந்து ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, ஆறு ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெத்தாடிய கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம், 21 பந்துகளிலேயே வெற்றியிலக்கையடைந்தது.
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025