2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜனவரி 01 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை,  இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்திய டிரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் தெரிவித்தது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி, கிபுட்ஸ் நிர் ஓஸ்-இல் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அப்துல் ஹாதி சபா வழிநடத்தியதாக, இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

நுக்பா படைப்பிரிவு தளபதி தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உளவுத்துறை மற்றும் ஐ.எஸ்.ஏ. தாக்குதலில் நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்," என்று, இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட அப்துல் ஹாதி சபா, இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை வழிநடத்தியுள்ளதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7ஆம் திகதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பின்புலமாக இருந்த அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று, இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X