2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துகள் பறிபோனது

Freelancer   / 2025 மார்ச் 12 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஷேக் ஹசீனா மீதான ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று டாக்கா நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, ஷேக் ஹசீனாவின் இல்லமான சுதாசதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்துக்குச் சொந்தமான 124 வங்கி கணக்குகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X