2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ட்ரம்பை விட்டு விலகும் எலான் மஸ்க்

S.Renuka   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதத்துக்குள் (மே) ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் என புதன்கிழமை (23) அன்று உலக பணக்காரர்களில் ஒருவரும் 'டெஸ்லா' நிறுவன அதிபருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. 

அதன் செயல் தலைவராக எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார்.

தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. 

இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது. 

இந்தநிலையில் ட்ரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கின. 

நேற்று முன்தினமான 22 ஆம் திகதி ஒரேநாளில் 20 சதவீதம் வரை டெஸ்லாவின் இலாபம் குறைந்தது. 

இந்தநிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ள இருப்பதாக கூறியுள்ள எலான் மஸ்க், இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த மாதத்துக்குள் (மே) ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .